தொழிற்சாலையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளி மீட்பு – உரிமையாளர் மீது வழக்குபதிவு..!

கோவை பீளமேடு அருகில் உள்ள சின்னியம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ( ஆட்டோ கேரேஜ்) உள்ளது இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது .அவர்கள் நேற்றுஅங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த தொழிற்சாலையில் வெங்கட் குணா என்ற சிறுவனை வேலைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்ததொழிற்சாலையில் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.