குறிச்சி குளத்தில் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்பு- போலீசார் விசாரணை..!

கோவை : மைசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 45). இவர் கோவை சுந்தராபுரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததார். இவர் தனது மனைவியை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கோவை குறிச்சி குளத்தில் 45 வயது மதிக்கதக்க ஆணின் உடல் மிதப்பதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது பிரபு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு எவ்வாறு இறந்தார் ? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்