பழக்கடை முன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீஸ் விசாரணை..!

கோவை கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள ஒரு பழக்கடைக்கு முன் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அந்த பகுதி வி.ஏ.ஓ .செல்வராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.