கோவை முக்கிய சாலையில் கருகிய நிலையில் பெண்ணின் உடல் மீட்பு – கொலையா..?போலீசார் தீவிர விசாரணை.!!

கோவை காந்திபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் உடல் கருகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து கொலையாக இருக்க கூடும் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் செல்ல முக்கிய சாலையாக இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..