சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா- முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.!!

விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறை வாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவி தொகை வழங்கும் விழா -முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் எஸ் பிளனேடு சாலையில் இன்று விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவித்தொகையை முதல்வர் மு.க. ஸ்டாலின்  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார். கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி , காவல் துறை இயக்குனரும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள்  துறை இயக்குனர்  அமரேஷ் புஜாரி ,  சிறை துறை துணை தலைவர் முருகேசன், காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, சிறை துறை துணை தலைவர் கனகராஜ் , சிறை மீண்டோர் பொருளாளர் ஞானேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்..