கோவை கணபதி எப்.சி.ஐ. ரோடு, பாலு கார்டனை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 60) இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார் .அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இது குறித்து ராஜேஸ்வரி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply