சமூகவலைத்தளங்களில் துப்பாக்கியுடன் மிரட்டல் பதிவு – 2 நிர்வாகிகள் மீது வழக்கு.!!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிர்வாகியாக உள்ளார். இவர் கை துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சைக்குரிய வாசகங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி புகார் செய்தார் . அதன் பேரில் லோட்டஸ் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல கோவையில் சுவாமி விவேகானந்தர் பேரவை நிறுவனர் – தலைவராக பதவி வகித்து வருபவர் ஜி. ஆர் .ஜனார்த்தனன் என்ற ஜெகநாதன் . இவரும் பொதுமக்களிடையே பீதி ஏற்படும் வகையில் ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் பரவ விட்டாராம். இது தொடர்பாக கடை வீதி சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.