கல்லூரி விடுதியில் துணிகர திருட்டு – சிறுவன் கைது..!

கோவை : பொள்ளாச்சியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்குள்ள மாணவர் விடுதியில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து விடுதி வார்டன் முத்துராஜ், மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 18 வயது சிறுவனை கைது செய்தனர். பொருட்கள் மீட்கப்பட்டது . பின்னர் சிறுவர்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.