ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் விபத்து ! கீழக்கரையை சார்ந்த 11 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் காயம் !!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ் என் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாக்கிர் அலி இவர் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு தனது சகோதரி சகோதரியின் 11 வயது மகன் ஆகியோருடன் SwIft காரில் ஊர் திரும்பி உள்ளார். அப்போது கார் ஆர்.எஸ் மங்கலம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது இந்திரா நகர் பகுதி சேர்ந்த கோவிந்தராஜன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் குறுக்கே சென்றதால் நிலை தடுமாறி கார் அருகில் உள்ள மடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாக்கிர் அலி, அவரது சகோதரி சகோதரியின் 11 வயது மகன் ஆகியோர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த கோவிந்தராஜன் என்பவருக்கு காலில் எலும்பு முறிந்தது தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.