ரஃபேல் வாட்ச் விவகாரம்… பில்லை வெளியிட்டார் அண்ணாமலை.!!

பேல் வாட்ச்சை 3 லட்ச ரூபாய்க்கு வாங்கியதாக கூறியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதற்கான பில்லை வெளியிட்டுள்ளார்.

திமுகவுக்கும் – அண்ணாமலைக்கும் இடையேயான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில், திமுக மீது அண்ணாமலை தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்சுக்கான பில்லை திமுகவினர் கேட்டனர். வாட்ச் பில்லை வெளியிடாத அண்ணாமலை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பு மூலம் அண்ணாமலை வாட்ச் பில்லை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது என்றும் அதில் ஒன்றை தாம் வாங்கியதாக கூறியுள்ளார்.

கோவை ஜிம்சன் எனும் நிறுவனத்தில் ரபேலின் 2ஆவது வாட்ச் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மே 27ஆம் தேதி அதனை வாங்கியதாக தெரிவித்துள்ளார். பில் விவரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார்.