ராணி எலிசபெத் காலமானார்.. உலக தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்..

ங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் நேற்று உடல் நலக் குறைவால், தனது 96வது வயதில் காலமானார்: உலகில் மிக நீண்ட காலங்களாக, சுமார் 70 ஆண்டுகள் அரியணையை மகாராணியாக அலங்கரித்தவர் எலிசபெத்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் பொறுப்பேற்கவுள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) 11 மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் விக்டோரியா ராணி மட்டுமே 63 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்தார்.

இந்நிலையில் 2ம் எலிசபெத் அந்த சாதனையை முறியடித்து 70 ஆண்டுகள் இங்கிலாந்து அரண்மனை அரியாசனத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார். 1947 ல் 2ம் எலிசபெத், பிலிப் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் 2ம் எலிசபெத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவரது கணவர் பிலிப் 99 வயதில் காலமானார். இந்நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராணி எலிசபெத்தின் மறைவையடுத்து, 73 வயது கொண்ட அவரது மகன் சார்லஸ் அடுத்த மன்னராக பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணியாக இவர் பொறுப்பேற்ற பிறகு, 14 பிரதமர்கள் இவரது காலத்தில் ஆட்சி செய்தனர். இவர் 16 நாடுகளின் ராணியாகவும் இருந்துள்ளார். இறுதியாக அவர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி என்பது அந்நாட்டின் பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸ் என்பவர் 2ம் எலிசபெத்தை சந்தித்து வாழ்த்து பெற்றது தான்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள், அரசர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.