வாடகைக்கு ரூம் எடுத்து விபசாரம்… 3 பேர் கைது: கார்,பணம் பறிமுதல் – அழகிகள் மீட்பு..!

கோவை செல்வபுரம் சௌடேஸ்வரி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2-வது மாடியில், அறைகள் எடுத்து விபசாரம் நடப்பதாக செல்வபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கோவை மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் ரோட்டை சேர்ந்த முருகேசன் (வயது 64 ) சரவணம்பட்டி ஜி கே எஸ் நகரை சேர்ந்த முத்துப்பாண்டியன் (வயது 39) வேடப்பட்டி தாரணி ( வயது 38 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரதீஷ்குமார் ,, தனசேகர் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த அழகிகள் சரண்யா ( வயது 29 ) சத்யா (வயது 32) கார்த்திகா( வயது 33) ஆகியோர் மீட்கப்பட்டு ஒண்டிப்பதூரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு காரும்,ரூ 1 லட்சத்து 90 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..