சொத்து தகராறு… தம்பியை தாக்கிய அண்ணன் கைது..!

கோவை, தொட்டிபாளையம் ரோட்டில் உள்ள பொதிகை பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தொழில் அதிபர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவியின் மகன் சரவணன் (வயது 41)முதல் மனைவியின் மகன் கார்த்திகேயன்(வயது 41)சொத்து தகராறு தொடர்பாக இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சரவணன் தொட்டிபாளையத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான குடோனில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழே பிடித்து தள்ளினாராம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக சரவணன் கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டிருந்தார் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன் கார்த்திகேயனை கைது செய்தனர். இவர் மீது 2பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.