கோவை பள்ளிக்கூடம் அருகே போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது..!

கோவை ஆர் எஸ், . லாலி ரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் . இவரது மகன் பூச்சி என்ற கிருஷ்ணன் (வயது 23) இவர் நேற்று ஆர். எஸ் .புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் நின்று கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன்,சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் ஆகியோர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..