ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என துறை சார்ந்தவர்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடையில்லை.!!

அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், மின்சாரத் துறை, காவல் துறை, மாநகராட்சி, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்புதுறை, காவல்துறை, முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவதுஅதிகரித்து வருகிறது. இதுகுறித்துபோக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள்வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக குற்றச் செயல்களில் தொடர்புடைய சிலர் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரின் கவனத்தை திசை திரும்பி நழுவினர்.
இதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் மதிப்பைவலுப்படுத்தும் வகையிலும் சென்னை காவல் ஆணையர் ஒப்புதலின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல்துறை உட்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடும் நிலை உள்ளது.
எனவே, தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் வந்தது. ஊடகம், மருத்துவர், வழக்கறிஞர்கள் தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை பாயும். அதேபோன்று நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என போக்குவரத்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், போலீஸார் அவர்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதை இன்று முதல் அகற்ற வாய்ப்பு உள்ளது.
வாகன அடையாள ஸ்டிக்கர் கிழிக்க உத்தரவிடவில்லை…
காவல்துறை உயர்அதிகாரி விளக்கம்..
 அண்மையில் இரு சக்கரம் மற்றும் வாகனங்களில் ஒட்டப்படும் அடையாள ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என செய்தி ஒன்று வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து சில இடங்களில் போலீசார் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு அடையாள இலச்சினைகளையும் கிழித்தெறிந்தனர்.
இதனால் செய்தியாளர்கள் மற்றும் பிற அரசு துறை சார்ந்தவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் காவல் போக்குவரத்து  உயர்அதிகாரி  சுதாகர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம்  கேட்டபோது .அவர் அப்படி அடையாள ஸ்டிக்கர் மற்றும் இலச்சினைகளை கிழித்து எறிய காவலர்களுக்கு உத்தரவிடப்படவில்லை என்றார். மேலும் வாகனங்களில் உள்ள பதிவெண் இடம்பெற்றுள்ள பகுதியில் எந்த ஒரு உருவமும் எழுத்தும் இருக்க கூடாது எனதான் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் குற்றங்களை தடுக்கவும். குற்றவாளிகளை  அடையாளம் காணும் விதமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். செய்தியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய ஸ்டிக்கர். மற்றும் இலச்சினைகளை கிழிக்கவோ அகற்றவோ உத்தரவிடப்படவில்லை. என்றார். இதனால் செய்தியாளர்கள் குழப்பமின்றி தங்களின் பணி தொடரலாம். வாகனங்களின் பதிவு எண்கள் உள்ள இடத்தில் ஸ்டிக்கர்கள் இருந்தால் அவற்றை அகற்றி காவலர்களின் கண்காணிப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என சென்னை மாநகர வாகன ஓட்டிகள் அனைவரையும்கேட்டுக்கொண்டுள்ளார்‌