மதுவில் விஷம் கலந்து குடித்து காவலாளி தற்கொலை..

கோவை அருகே உள்ள வேடப்பட்டி குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 34) இவர் ஆர். எஸ். புரம் .பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் உடையவர் . இவர்கள் கடந்த 27ஆம் தேதி ஆர் எஸ் புரம் லாலி ரோடு முனியப்பன் கோவில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார்.திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து அவரது தம்பி சந்தோஷ்குமார் ஆர் .எஸ். புரம், போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.