குட்டையில் குதித்து முதியவர் தற்கொலை…

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள எரித் துறையைச் சேர்ந்தவர் சந்திரன் ( வயது74)இவர் அங்குள்ள குழந்தை வடிவேல் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்து விவசாய விளைநிலத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.