வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் – 11 பேர் கைது..!

கோவை ரத்தினபுரி, சின்னம்மாள் வீதியில் வசிப்பவர் இம்மானுவேல் ( வயது 46) இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரத்தினபுரி போலீசுக்கு தகவல் வந்தது .

சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக வீட்டின் உரிமையாளர் இமானுவேல் மற்றும் நடராஜ் (52)கிருஷ்ணன் (52) பொன்னுசாமி ( 37 ) நித்தியானந்தம் ( 42 ) வேணுகோபால் (34) கணேசன் (32) வேலு குமார் வயது (39) மனோஜ் (42) மயில்சாமி நாதன் ( 53 ) தாமோதரன் (40 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணம் ரூ.55, ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.