கோவை பட்டதாரி பெண்ணுக்கு காதல் புகைப்படங்களை அனுப்பி மிரட்டும் முன்னாள் காதலன் மீது புகார்..!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். எம்.பி.ஏ. பட்டதாரி.தற்போது இவர் பெங்களூருவில் பணிபுரிகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது அவருடன் படித்த மதுரையை சேர்ந்த பூவரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது .அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் .இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பெங்களூரில் வேலை கிடைத்தது .இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இதனால் பிரிந்து விட்டனர். ஆனால் அந்த நபர் காதலிக்கும் போது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அந்தப் பெண்ணின் நண்பர்கள் , உறவினர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பி மிரட்டி வருகிறார். இதுகுறித்து அந்த பெண் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..