லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு- பைக் ஆசாமிகள் கைவரிசை.!!

கோவை : சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 30) லாரி டிரைவர் .இவர் நேற்று சென்னையில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு மதுக்கரை எல்அன்டி பைபாஸ் ரோடு வழியாக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். போத்தனூர் எல் அன் டி பைபாஸ் ரோட்டில் ஜல்லிக்காடு மைதானம் அருகே லாரியை பின் தொடர்ந்து வந்த 2 பேர் டிரைவரிடம் டயர் பஞ்சர் ஆகி உள்ளது. என்று கூறினார்கள் இதை நம்பிய லாரி டிரைவர் முத்துகிருஷ்ணன் லாரி ஓரமாக நிறுத்தினார். அப்போது அந்த ஆசாமிகள் இருவரும் முத்துக்கிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். அப்போது அவர்கள் லாரியில் ஏறி “டேஷ் போர்டில் ” இருந்த பணம் ரூ.10, ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து முத்துகிருஷ்ணன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகிறார்கள்.