திமுகவின் ஆட்சியை கண்டு மக்களுக்கு சலிப்பு வந்துவிட்டது – பிரதமர் மோடி சாடல்.!!

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளேன். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவின் நல்லாட்சி பற்றி தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது பாராட்டுக்குறிய விஷயம். அதேபோல் திமுக ஆட்சியில் மக்கள் சலிப்படைந்துள்ளதும் உண்மை தான். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை மிகுந்த நம்பிகையுடன் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சூறாவளி பயணம் மேற்கொண்டார். பாஜக பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.