டெலிகிராமில் பார்ட் டைம் வேலை… பரவும் வாட்ஸ் அப் மெசேஜ்… பட்டை நாமம் போட்ட ரூ.55 லட்சம்- கேடி ஊரப்பாக்கம் டோமினிக் அதிரடி கைது..!!

ஆவடி: ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி மோசடியாக பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்ற புது டெக்னிக்..

சென்னை மற்றும் ஆவடி தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் வேலை தேடுபவரா லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆசையா என ஏகப்பட்ட விளம்பரங்கள் வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட விளம்பரங்கள் இதைப் பார்த்த அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பாலமுருகன் மோசடி பேர்வழி கொடுத்த மொபைல் போனிலும் டெலிகிராமிலும் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் பிட் காயின் டிரேடிங் என்ற பெயரில் பாலமுருகனுக்கு பயன்படுத்துவோர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கொடுப்பார்கள் அந்தக் கணக்கில் அவர்களுடன் சாட் செய்த போது பல வங்கிக் கணக்கிலேயே பணம் போட சொல்கிறார்கள் இந்த பணத்திற்கு அவருக்கு லாபமாக வரும் பணத்தை அவருடைய வங்கி கணக்கில் போட்டு விடுவதாக மோசடி நபர்கள் கூறியதை  நம்பி பாலமுருகனும் ரூபாய் 55 லட்சத்து 38 ஆயிரத்து 625 முதலீடு செய்து உள்ளார். ஆனால் கேடி நபர்கள் கூறியபடி பாலமுருகனுக்கு பணத்தை திரும்பத் தராத காரணத்தால் தான் மோசம் போய் விட்டோமே என அறிந்த பாலமுருகன் 1930 மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார் .

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து பாலமுருகன் பணத்தை போட்ட வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை எடுத்து பார்த்ததில் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த டோமினிக் என்பவன் அவனுடைய ஐசிஐசிஐ வங்கி கணக்குகளை பயன்படுத்தியது தெரிய வந்தது. அவனை கைது செய்து கிடுக்கி பிடியில் விசாரணை செய்ததில் டெல்லியில் உள்ள பிராடு நபர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு அதன் மூலம் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் டோமினிக் மற்றும் டெல்லியை சேர்ந்த பிராடு நபர்கள் சேர்ந்து ஏமாற்றியது தெரிய வந்தது. டோமினிக்கை பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்..