காதலுக்கு தடை விதித்த பெற்றோர்… கல்லூரி மாணவி தற்கொலை..

கோவை பீளமேடு அருகே உள்ள கருப்பராயன் பாளையம், கென்னடி வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இவரது மகள் அபிராமி ( வயது 19) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் .பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம். அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதை அறிந்த பெற்றோர்கள் படித்து முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் .அதுவரை ஒழுங்காக படிக்கவும் என்று கூறினார்கள். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைத்த அபிராமி வீட்டிலிருந்த எலி மருந்தை தண்ணீரில் கரைத்து குடித்து விட்டார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்து பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார் .இது குறித்து அவர் தந்தை ராமமூர்த்தி பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..