பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் டிரைவர் சடலம் – காதல் தோல்வியால் விபரீத முடிவு..

கோவை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 45) இவர் ஈச்சனாரி கணேசபுரம் ரயில்வே கேட் அருகே ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜ்குமார் நைனால் கயிறை விட்டதில் கட்டி தூக்கில் தொங்கியது தெரியவந்தது .உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர் பூவிழி என்ற பெண்ணை காதலித்து வந்தாராம்.அந்தப் பெண் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் மனமுடைந்த ராஜ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.