மதுரையில் பயங்கரம்… நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொடூர கொலை : 5 பேர் கைது – 8 பேருக்கு வலைவீச்சு.!!

டுரோட்டில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை : 5 பேர் கைது – 8 பேருக்கு வலைவீச்சு.!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பானடிபகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் பாபி கார்த்திக். இவர் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டியன்  மதுபோதையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாபி கார்த்திக்கிடம் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில், ராமர் பாண்டியனின் நண்பர் காளீஸ்வரன் என்பவர் தனியாக சாலையில் நடந்து சென்ற போது, பாபி கார்த்திக் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த காளீஸ்வரன் சம்பவம் குறித்து ராமர் பாண்டியனிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ராமர்பாண்டியன் தரப்பினர் பாபி கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன் படி தன் நண்பர் வீட்டின் அருகே மது குடித்துக் கொண்டிருந்த பாபிகார்த்திக்கை ராமர்பாண்டியன் உள்ளிட்ட 13 பேர் வெட்டினர். உடனே பாபி கார்த்திக் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். ஆனால், அந்த கும்பல் பாபி கார்த்திக்கை ஓட, ஓட விரட்டிச்சென்று வெட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தெப்பக்குளம் போலீசார் பாபி கார்த்திக்கின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் ராமர்பாண்டியன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இதில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ராமர்பாண்டியன் உள்ளிட்ட எட்டு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..