சுதந்திர தினத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – கலெக்டர் கிராந்தி குமார் அறிவிப்பு..!   

சுதந்திர தினத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – கலெக்டர் கிராந்தி குமார் அறிவிப்பு..!   கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு வாணிப கழகம் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக் கூடங்கள், அனைத்து பொழுதுபோக்குமன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் , தமிழ்நாடு ஓட்டலில் செயல்படும் மது கூடங்கள் மற்றும் வெளிநாட்டு மது பானவகைகள் விற்பனை செய்யும் கடைகள், அனைத்தும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாளை மறுதினம் ( செவ்வாய்க்கிழமை) மூட உத்தரவிடப்படுகிறது. இதனை மீறி அன்றைய தினம் மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.