கோவை ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை..! 

கோவையில் ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை..!  கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் சாலை விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.