விட்டுக் கொடுத்த ஓபிஎஸ்… நன்றி சொன்ன இபிஎஸ்-க்கு நெருக்கமான செங்கோட்டையன்..!

ரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர்.

நேற்று  ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.

இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். நம்முடைய அண்ணன் ஓபிஎஸ்-க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இபிஎஸ் உடன் மிக நெருக்கமாக இருக்கும் செங்கோட்டையனே ஓபிஎஸ்-ஐ அண்ணன் என்று கூறிவிட்டதால், அதிமுக இணைய தொடங்கிவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.