டொனால்ட் ட்ரம்ப்: மூன்றாம் உலகப்போரை என்னால் மட்டும்தான் தடுக்க முடியும்

அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதியற்றவர் என கொலாராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தான் பொறுப்பில் இருந்தால்தான் மூன்றாம் உலகப்போரை தடுக்க முடியும் என கூறியுள்ளார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மூன்றாம் உலகப்போர் விரைவில் வெடிக்கவிருப்பதாகவும், அதைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெளியுறவு கொள்கைகளை குற்றம் சாட்டும் டிரம்ப், உலகில் அணுசக்தி போர் நடைபெறுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், ‘டிரம்ப் பிரதமராக இருந்திருந்தால் உக்ரைனிலும் ஐரோப்பாவிலும் போரே நடந்திருக்காது’ என ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியதைச் சுட்டிக்காட்டினார். ‘மூன்றாம் உலகப்போர் வெறும் ராணுவங்களுக்கு இடையேயான சண்டையாக முடிந்துவிடாது. உலகையே அழித்துவிடும்’ எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் மூன்றாம் உலகப்போரானது ராணுவங்களுக்கு இடையேயானதாக மட்டும் இல்லாமல் உலகையே அழித்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் எனக் கொலாராடோ நீதிமன்றம் தீர்பளித்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள சூழலில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.