ஆபரேசன் கஞ்சா வேட்டை 3.0… 3 நாட்களில் 361 கிலோ கஞ்சா பறிமுதல்: 403 குற்றவாளிகள் கைது-போலீசார் அதிரடி ..!

மிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கஞ்சா வேட்டை நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை செய்பவர்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.