ஒரே நாளில் மூதாட்டி, 2 முதியவர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 68) இவர் தீராத வயிற்றுவலி அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனம் உடைந்து நேற்று சாணி பவுடரை கரைத்துக் குடித்தார் .பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்தார். இது குறித்து அவரது மகன் ரங்கராஜ் கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல காரமடை பக்கம் உள்ள பெரிய புத்தூர், மூணு காட் டுரை சேர்ந்தவர் நஞ்சு குட்டி (வயது 75)இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்து விஷம் குடித்தார். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து இவரது மகன் மோகனசுந்தரம் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

பொள்ளாச்சி பக்கம் உள்ள மோதிராபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 7)2 இவர் மூச்சுத் திணறால் அவதிப்பட்டு வந்தார் .அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து சாணி பவுடரை குடித்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் மணிகண்டன் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.