பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை..

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பூக்குளத்தை சேர்ந்தவர் திருமலைசாமி . இவரது மனைவி வெங்கட் அம்மாள் ( வயது 86 )சில நாட்களுக்கு முன்பு இவரது மருமகன் இறந்துவிட்டார் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வெங்கட் அம்மாள் சுல்தான்பேட்டையில் உள்ள ஆவின் பால் கம்பெனி அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் பாலகிருஷ்ணன் சுல்தான் பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.