மனைவிக்கு வரதட்சணை கொடுமை – கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை செல்வபுரம் ,வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சவுந்ந்தர்ராஜன். இவரது மனைவி ஜாஸ்மின் (வயது 37) இவர்கள் இருவரும் 19-3 – 2010 அன்று மருதமலை கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிஷோர் (வயது 12) கிரீஸ் ( வயது 9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் செட்டி வீதியில் லேத் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும் சரண்யா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.இதை மனைவி ஜாஸ்மின் கண்டித்தார் இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் கணவர் ச வுந்தர்ராஜன் அவரது தந்தை சந்திரன், தாயார் பிரேமா, நாத்தனார் நிஷாந்தினி ஆகியோர் ஜாஸ்மினிடம் ரூ. 7 லட்சம் வரதட்சணையாக வாங்கி வந்தால் தான் சவுந்திரராஜனிடம் வாழ முடியும் என்று மிரட்டல் விடுத்தார்கள். இது குறித்து ஜாஸ்மின் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி கணவர் சவுந்தர்ராஜன், மாமனார் சந்திரன் மாமியார் பிரேமா நாத்தனார் நிசாந்தினி ஆகியோர் மீது கொலை மிரட்டல், வரதட்சணை கொடுமை உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..