ஒ. பன்னீர் செல்வம் தாயார் மரணம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.24) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. பழனியம்மாளின் இறப்புக்கு தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். தாயாரின் மறைவு செய்தி கேட்டதும் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு சென்றார். இந்த நிலையில் பழனியம்மாள் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓபிஎஸ்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.