இனி குடும்ப தலைவிகள் பெயரில் தான் வீடு வழங்கப்படும்: தமிழக முதல்வர் அதிரடி.!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க  வின் தலைவரும் , முதலமைச்சருமான மு . க . ஸ்டாலின் பங்கேற்று , தி.ம.க  மகளிரணியின் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் .

இந்நிகழ்வில் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள் . உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர் . ஆண்களை விட பெண்களே அதிகமானோர் கல்வி பயில்கின்றனர் .

பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை தி.மு.க கொண்டு வந்தது . அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40% ஆக உயர்த்தியுள்ளோம் . மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .

கட்டணமில்லா பேருந்து பயணத்தின்போது பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான் , என் வாழ்நாளின் மகிழ்ச்சி . பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை தி . மு . க ஆட்சிதான் வழங்கியது .

பெண்களின் முன்னேற்றத்திற்காக 1929 ல் தந்தை பெரியார் கொண்டுவந்த தீர்மானங்களை கலைஞர் 1989 ல் சட்டமாக்கினார் . இதுதான் பெண்ணினத்திற்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக்கொடை . இதுதான் திராவிட மாடல் !

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இனி வழங்கப்படக்கூடிய வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் .

பெண்களை சொற்களில் போற்றாமல் வாழ்க்கையில் போற்றுவோம் . பெண்ணுரிமையின் அடிநாதமான பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்வோம் என்று கூறினார்.