ஓடும் ரயிலில் 19 கிலோ கஞ்சா பிடிபட்டது – 2 பேர் கைது..!

சேலம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காட்பாடியில் இருந்து சேலம் வந்து கொண்டிருக்கும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் முதல் நிலை காவலர் சக்திவேல் காவலர் ஏழுமலை ஆகியோர் சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே s3 பெட்டியில் சீட்டுக்கு அடியில் இருந்த பேக்கில் ஏழு பண்டல்களில் 19 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இந்தப் பை யாருடையது எனக் கேட்டோம் அவர்களும் இப்போ என்ன என்னுடைய பை தான் தெனாவட்டாக பதில் கூறினர். அவர்களையும் கஞ்சாவை எடுத்துக் கொண்டு சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் உள்ளே அழைத்துக் கொண்டு வந்தோம் . குற்றவாளிகள் பெயர் விவரம் வருமாறு 1. அணில்லிமா வயது 20, தகப்பனார் பெயர் ஏ பில்லிம ராய்பும்மா கிராமம்
கடுவா போலீஸ் எல்லை கஜபதி மாவட்டம் ஒடிசா மாநிலம் , 2.ரோக்கி மஜ்ஜி வயது 20 தகப்பனார் பெயர் நோரி மஜ்ஜி ராய் பு ம்கா கிராமம், கடுவுவா காவல் நிலைய எல்லை
கஜபதி மாவட்டம் ஒடிசா மாநிலம் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..