கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்… நான் பார்த்துக் கொள்கிறேன்- முதல்வர் பேச்சு..!

டந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும் என முதல்வர் பேச்சு.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுவோம். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம். அணிகளுக்கென்று தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக்கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும்.

பூத் கமிட்டி அமைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அரசின் திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என்பதை கவனியுங்கள் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.