கஞ்சா போதையில் கத்தியால் குத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவையில் வெளியாகி பரபரப்பு

கஞ்சா போதையில் கத்தியால் குத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவையில் வெளியாகி பரபரப்பு

கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் இருவர் கைது. சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை சுங்கம் பகுதியில் போதையில் இருந்த தந்தை மகன் ஆகியோர் எதிர்தரப்பினரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சுங்கம் புறவழிச் சாலை சிவராம் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கஞ்சா போதையில் இருந்த முகேஷ், அவரது தந்தை ஆறுமுகம் முகேஷின் சகோதரர் முத்துக்குமார் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் ரமேஷ் ஆகியோர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் போலீசார் தாக்குதல் நடத்திய முகேஷ் மற்றும் தந்தை ஆறுமுகத்தை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் முகேஷ் கத்தியால் குத்துவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள முகேஷின் அண்ணன் முத்துக்குமாரை ராமநாதபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.