இனி கட்டடம் கட்ட அனுமதி கேட்டு எங்கும் அலைய வேண்டாம்… அனைத்துக்கும் வீட்டிலிருந்த ஆன்லைனில் பெறலாம்- இதோ நடைமுறைக்கு வந்துவிட்டது..!!

னி தமிழகத்தில் திட்ட அனுமதி பெறுவது, கட்டிடம் கட்ட அனுமதி, மனைகள் ஒப்புதல் பெறுவது என அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளும் நடைமுஐ நேற்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் அனைத்து துறைகளையும் காகிதமில்லா நடைமுறையை செயல்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை நகர்ப்புற ஊரமைப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் 2022-2023 நிதி நிலை அறிக்கையில் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. உடனக்குடன் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். எதிலும் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் இத்திட்டம் ஒற்றைச்சாளர முறையில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் படி மனைப் பிரிவு உத்தேசங்கள் ஆன்லைன் மூலம் பகிரப்படுகிறது. இந்த நடைமுறை நேற்று, செப்டம்பர் 15ம் தேதி முதல் அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட உத்தேச அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் இவை குறித்த உத்தேச விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற அனுமதி அளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.