ஆற்றில் மூதாட்டி பிணம்-மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் பின்புறம் பவானி ஆற்றில் நேற்று ஒரு பெண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 70 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சிக்கதாசம்பாளையம், கிராம நிர்வாக அதிகாரி யாசர் அராபத் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணை நடந்து வருகிறது.