ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கிய இருவரை பிடித்து கோவையில் NIA மற்றும் காவல்துறையினர் விசாரணை

ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கிய இருவரை பிடித்து கோவையில் NIA மற்றும் காவல்துறையினர் விசாரணை

கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் கோவில்பட்டியைச் சேர்ந்த கோமதி தேவன் என்பவருடைய மகன் மாரியப்பன், செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பழைய குற்றவாளி என்பதும் இவர் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் இருந்து வருவதும் தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் வெடி மருந்து பொருட்கள் வாங்கி உள்ளதாக தெரிய வந்தது. இதனை அடுத்து ஆன்லைனில் வெடி மருந்து பொருட்கள் எதற்காக வாங்கப்பட்டது. இவருக்கும் கோவை கார் குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு உள்ளதா? எனவும் மேலும் இவரது கூட்டாளிகள் யார் என சரவணம்பட்டி காவல் துறை மற்றும் NIA விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது