கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய அதிரடி திருப்பங்கள் – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடவடிக்கை என முதலமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவருக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதல் சம்பவம் முதல் பொள்ளாச்சி, கோடநாடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வரை நடைபெற்றது.

முதலமைச்சர் கூறுகையில், கோட நாடு சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்தது யார்?, அதிமுக அரசின் மெத்தனப் போக்கால் உண்மையை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது. கோடநாடு வழக்கில் திமுக அரசு நிச்சயம் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகள் தப்ப முடியாதபடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக் கப்படும். கோடநாடு வழக்கில் 302 பேரிடம் தனிப்படை விசாரணை நடத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் விசாரணை நடத்தி தடயங்கள் சேகரித்து வைத்து இருந்தால், வழக்கை விரைவாக முடித்திருக்க முடியும். எனவே உண்மையைக் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.

இபிஎஸ் கூறுகையில், கோடநாடு வழக்கை சிபிஅய் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசு. கோடநாடு பங்களா ஜெயலலிதா வீடு அல்ல, மற்றொருவ ருடையது என தெரிவிக்க, இது ஜெய லலிதாவின் முகாம் அலுவலகமாகவும், அவர் வசித்த இடமாகவும் இருந்தது தான் கோடநாடு பங்களா என முதலமைச்சர் பதிலளித்தார்.

ஜெயலலிதா சாதாரண நபர் அல்ல, முதலமைச்சராக இருந்தவர், அவர் இருந்த கொடநாடு பங்களாவில் சம்பவம் நடந்தது வேதனைக்குரியது. குற்றவாளியை நிச்சயம் கண்டுபிடிப் போம் என முதல்வர் கூற, ஏதேதோ ரூபத்தில் மிரட்டி பார்க்கிறார்கள், எதுவும் நடக்காது. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, இந்த வழக்கை சிபிஅய் விசாரிக்க வேண்டுமென வழக்கு தொடர உள்ளோம் என இபிஎஸ் தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு தான் காரணம். 100 நாட்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை அப்போதைய முதல மைச்சர் ஏன் அழைத்து பேசவில்லை என பல்வேறு கேள்விகளை முதல மைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் எழுப்பினர். தொடர்ந்து பேசிய முதல மைச்சர், பொள்ளாச்சி, கோடநாடு விவகாரங்களில் திமுக ஆட்சி அமைந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆட்சி நடைபெறும் பொழு தும் ஒவ்வொரு தவறுகள் நடைபெறும் தான். ஆனால் நடைபெறுகின்ற நேரத் தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இந்த ஆட்சி என்றார்.