புதுச்சேரிக்கு புதிய கவர்னர்… சி.பி.ராதாகிருஷ்ணன் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு.!!

ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும், தெலங்கானா ஆளுநர் பொறுப்பையும் சி.பி.ராதாகிருஷணன் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணைநிலை (பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.