இன்று முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்.!!

கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கின்ற தீப்பெட்டிகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் அரசு விதிகளை மீறி குறைந்த விலையில் லைட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் என இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதால் வடமாநிலங்களில் தீப்பெட்டி விற்பனை பாதியாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் கையிருப்பு அதிகமாக இருப்பதால் மூலப்பொருள் கொள்முதலுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் இதற்கு தற்காலிக தீர்வு காணும் பொருட்டு இன்று (13ம் தேதி) முதல் வரும் 22ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உற்பத்தி நிறுத்தம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது.தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி இன்று முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்காலிக தீர்வு காணும் பொருட்டு உற்பத்தி நிறுத்தம் செய்வதென்று உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.