காருக்குள் ஆண் பிணம் – கொலையா..? போலீஸ் தீவிர விசாரணை.!!

கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் ( வயது 27) இவர் பொள்ளாச்சி புது ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார். பூட்டு உடைந்து இருந்ததால் காரை பூட்டவில்லை .இந்த நிலையில் நேற்று காலையில் காரை எடுக்க வந்தார். அப்போது காருக்குள் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருக்குள் பிணமாக கிடந்தவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..