தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல நிர்வாகிகள் தேர்வு..!

கோவை :தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலம் 35 வது பேரவை கூட்டம் நீலகிரி மாவட்டம் கேத்தியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கடந்த 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடந்தது. 3 வருடத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். இதில் திருமண்டல ஊழியத்தின் அறிக்கைகள் வாசிக்கப்பட்டது. ஆராதனைகள் நடத்தப்பட்டது. கடந்த 23 ம் தேதி மாலை 4 மணியளவில் ஜெபத்தோடும் பாடலோடும் பேரவை கூட்டம் நடந்தது.அன்று நடந்த தேர்தலில் திருமண்டலத்தினுடைய கவுரவ செயலாளராக  பிரின்ஸ் கால்வின் ,உபதலைவராக டேவிட் பர்னபாஸ் ,கவுரவ பொருளாளராக டி.எஸ். அமிர்தம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. பிறகு செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து திருமண்டல உயர்மட்ட குழு தேர்தலும் நடந்தது. இதில் திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட போதக சேகர பிரதிநிதிகள் 270 பேர் கலந்து கொண்டனர்..தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு கோவை பிஷப் திமோத்தி ரவீந்தர் பாராட்டு தெரிவித்தார்.