நம்பிக்கை வாக்கெடுப்பிலும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கே அமோக வெற்றி..!!

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே அம்மாநில புதிய முதல்வராக பதவியேற்றார்.இந்த வேளையில்,மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.சட்டமன்றத்தின் பலம் 288 ஆக உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 145 வாக்குகள் தேவைப்பட்டது.அதன்படி,நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசுக்கு 164 வாக்குகள் கிடைத்துள்ளது.இதனால்,மகாராஷ்டிரா புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.