காதல் தோல்வி.. வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் செல்லப்பாண்டி (வயது 27) கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்லப்பாண்டி நேற்று வீட்டில் உள்ள தேக்கு மரத்தில் நைலான் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.