கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது..!

கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கபட்டது. இளையபெருமாள் நல்லூர் தமிழ் அமுது அறக்கட்டளை சார்பில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடை பெற்ற ஐம்பெரும் விருது வழங்கும் விழாவில் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க. சொ.க.கண்ணன் இளம் கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கி பாராட்டினார். அருகில் அறக்கட்டளை நிறுவனர் இயக்குனர் தலைவர் இன்பராஜ், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் தர்மலிங்கம் பொருளாளர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்..