100 மாணவிகளை சீரழித்த .. தலைமறைவாக இருந்த காசியின் கூட்டாளி கௌதம் பிடிபட்டான்..!

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை சொல்லியும் மிரட்டியும் பாலியல் தொல்லை கொடுத்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த காசி என்கிற சுஜி கைதாகி சிறையில் உள்ளார்.

தலைமறைவாக இருந்த காசியின் கூட்டாளி கௌதம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். கோழி வியாபாரியான தங்கபாண்டியனின் மகன் காசி என்கிற சுஜி. சென்னையைச் சேர்ந்த இளம் மருத்துவரை காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்து வந்த காசி அவரது புகைப்படத்தையும் வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தா.ர் காதலிப்பதாக சொல்லி பல பெண்களை நம்ப வைத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொடர்பு வைத்திருந்ததும், அந்தப் பெண்களுக்கு தெரியாமலே வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்திருக்கிறார். அப்படித்தான் மருத்துவரையும் மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் தான் காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ச்சியாக புகார் கொடுத்து வந்தனர் . நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி , ஆசை வார்த்தை சொல்லி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. காசியின் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. காசிக்கு உதவியாக இருந்தவர்கள் இரண்டு பேர்.

இரண்டு பேரில் ஒருவர் நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னொருவர் கனகப்பபுரத்தை சேர்ந்த கௌதம். காசியின் முக்கிய கூட்டாளியான இவர் குவைத் சென்று தலைமறைவாகிவிட்டதால் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார் . இந்த நிலையில் தான் காசியின் செல்போன் லேப்டாப் ஆகியவற்றில் இருந்து ஆபாச படங்கள் அளிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்த சிபிசிஐடி போலீசார் லேப்டாப்பை யார் அழித்திருக்க கூடும் என்று விசாரணை மேற்கொண்ட போது தான், காசியின் தந்தை தங்கபாண்டியன் இந்த செயலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் .

இந்த வழக்கில் தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கில் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசார் தங்க பாண்டியனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி போலீசார் காசியின் வீட்டில் இருந்த ஆப்பிள் செல்போனில் அவர் பயன்படுத்திய லேப்டாப்பையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களை சோதனை செய்த போது காசி 100க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசை வார்த்தை சொல்லி, மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து இருந்தது தெரிய வந்திருக்கிறது. முழு நிர்வாண படங்கள், ஆபாச அறை நிர்வாண ஆபாச படங்கள் இந்த லேப்டாப்பில் இருந்துள்ளன . சிபிசிஐ போலீசார் இது அறிக்கையாக தாக்கல் செய்தனர் . இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்க பாண்டியனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டதால், தங்கபாண்டியன் ஜாமீன் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டு விட்டார்.

இந்த நிலையில் தான் குவைத்தில் தலைமறைவாக இருந்த கௌதம் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது . குவைத்தில் இருந்து கௌதம் மேற்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வருவதாக கிடைத்த தகவல்லின் பேரில் சிபிசிஐடி போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கவுதமை பிடித்து கைது செய்துள்ளனர். அவரை நாகர்கோவில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.